Thursday 15 September 2011

மற்றொரு மழைக்காலத்தில்....!!!!!!!!........??????

நேற்றுக்கு முந்திய நாட்கள்..........                                                  அத்தியாயம்-1

           மாலைமயங்கும் வேளையிலே  சாலையில் நடக்கையில் சில்லென்று வந்த சுழல்காற்று உடல் தடவி, மனம் வருடி செல்கையில் சுழன்றெழும்பி
பறந்தன சாலையோர தூசுகள் கூடவே என் மனமும்.

                                      தூறல்கள் விழுந்தன.

         மண்ணில் விழுந்த மழைத்துளிகள்   மண்ணின்                   நுண்ணுயிர்களை உயிர்பித்தது.

          என்னில் விழுந்த மண்வாசனை ஆழ்மனதின்
எண்ணங்களை   உயிர்பித்தது.
  
      இடி, என் மனக்குதிரையை வெகுண்டெழுந்து ஓடச்செய்தது
மின்னல், அதற்கு வெளிச்சம் காட்டியது,விரைந்தது......குதிரை.

        செட்டியார் கடையில் இனிப்பு போண்டா தின்று, சுக்கு காபி
குடித்துக் கொண்டு மனக்குதிரையில் எண்ணங்கள் பின்நோக்கி
பயணம் செய்தது.
  
        சாலையில் மழை நின்ற பொழுதும் என் மனச் சோலையில்
தூறல்கள் தொடர்ந்தன.......................................................................................


                                                                                                                       தூறல்கள் தொடரும்



(  இந்த தொடர்,  அவரவர் மனதின் பால்ய கால நுட்மான நினைவுகளை எனது நினைவு என்னும் மயிலிறாகால் வருடி நினைவு பெறச்செய்யும்
சிறு முயற்சி. )
           

1 comment:

  1. இது கவிதையா? அல்லது பழைய காலத்து நினைவலைகளா??

    ReplyDelete